×

சாரணிய துவக்குனர் பயிற்சி முகாம்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சாரணிய துவக்குனர் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சாரணிய மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமை தாங்கினார். இந்த பயிற்சி முகாமானது சாரண கொடி ஏற்றத்துடன் துவக்கப்பட்டது. முகாமில் திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே. பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அனைத்து வகை தனியார் பள்ளிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு பயிற்சி முகாமினை முன்னிட்டு புதியதாக 50க்கும் மேற்பட்ட சாரண, சாரணிய படை பிரிவுகள் பதிவு செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் சுகாநந்தம், தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் சிவதாஸ், தனியார் பள்ளிகளின் ஆய்வாளர் சௌத்ரி, ஜிஆர்டி கல்வியியல் கல்லூரி முதல்வர் ராதிகா வித்யாசாகர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இதில் திருத்தணி சாரணிய மாவட்ட முதன்மை பொறுப்பாளர்கள் பாரதி, சீனிவாசன், முருகன், ஜெயசந்திரன், தாமோதரன் மற்றும் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் முகாமில் கலந்து கொண்டனர். இந்த ஒரு நாள் சாரணிய துவக்குனர் முகாமில் நீலகண்டன், ரீம், ஜார்ஜ், எட்வின் சகாயராஜ் ஆகிய பயிற்றுநர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமின் இறுதியாக சாரணிய துவக்குனர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

The post சாரணிய துவக்குனர் பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Scout Initiator Training Camp ,Thiruvallur ,Tiruthani, Thiruvallur district ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு